Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவால் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு

ஆகஸ்டு 06, 2020 06:22

சென்னை: கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. கொரோனாவை எதிர்த்து போராடிய டாக்டர்கள், நர்ஸ்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் சிலரும் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களாக செயல் ஆற்றியபோது, நோய் தொற்றின் காரணமாக 28 அரசு ஊழியர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் இபிஎஸ் அறிவித்த நிவாரணத் தொகையான தலா 25 லட்ச ரூபாய் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்