Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீஹார் சட்டசபை தேர்தல்: பிரசாரத்தை துவக்குகிறார் ராகுல் காந்தி

ஆகஸ்டு 06, 2020 06:59

புதுடெல்லி: பீஹார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்தை கேட்டு வரும் நிலையில்,  காங். எம்.பி. ராகுல் , தேர்தல் பிரசாரத்தை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடீயோ கான்பரன்சிங் மூலம் பீஹார் மாநில மாவட்ட காங்.தலைவர்களுடன் உரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை காங். செய்து வருகிறது.

முன்னதாக கடந்த ஜூன் 7-ம் தேதி பா.ஜ. மூத்த தலைவர் அமித்ஷா தனது பிரசாரத்தை துவக்கி வைத்தார். இந்த சூழ்நிலையில் காங். எம்.பி. ராகுல் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைக்க உள்ளதாக மாநில தலைவர் சக்தி சிங் கோலி கூறினார்.

தலைப்புச்செய்திகள்