Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவின் பெயரை சொல்ல கூட பிரதமருக்கு தைரியமில்லை: ராகுல் காந்தி

ஆகஸ்டு 07, 2020 06:19

புதுடெல்லி: 'கிழக்கு லடாக்கில், இந்திய எல்லைக்குள், சீன ராணுவம் முகாமிட்டுள்ளதாக, நம் ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சிறிது நேரத்தில், அந்த தகவல் நீக்கப்பட்டுள்ளது.இது குறித்து, காங்., முன்னாள் தலைவரான ராகுல், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

சீனாவை எதிர்த்து நிற்பதை விடுங்கள். சீனாவின் பெயரை சொல்லக் கூட, நம்முடைய பிரதமருக்கு தைரியமில்லை. நம் எல்லைக்குள் சீன ராணுவம் இல்லை என மறுப்பது, இணையதளத்தில் இருந்து அது தொடர்பான ஆவணங்களை நீக்குவது ஆகியவற்றால், உண்மையை மறைக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்