![](admin/uploads/.61d52e713bcf70.40095006.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: 'கிழக்கு லடாக்கில், இந்திய எல்லைக்குள், சீன ராணுவம் முகாமிட்டுள்ளதாக, நம் ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சிறிது நேரத்தில், அந்த தகவல் நீக்கப்பட்டுள்ளது.இது குறித்து, காங்., முன்னாள் தலைவரான ராகுல், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
சீனாவை எதிர்த்து நிற்பதை விடுங்கள். சீனாவின் பெயரை சொல்லக் கூட, நம்முடைய பிரதமருக்கு தைரியமில்லை. நம் எல்லைக்குள் சீன ராணுவம் இல்லை என மறுப்பது, இணையதளத்தில் இருந்து அது தொடர்பான ஆவணங்களை நீக்குவது ஆகியவற்றால், உண்மையை மறைக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.