Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஷ்ய அதிபர் புடின் அக்டோபரில் இந்தியா வருகை?

ஆகஸ்டு 07, 2020 06:26

புதுடெல்லி: இந்தியா-ரஷ்யா இடையே இருதரப்பு ஒத்துழைப்பு வருடாந்திர மாநாடு அக்டோபரில் நடக்க விருப்பதையொட்டி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியது, கடந்த ஜூன் மாதம் ரஷ்யாவில் நடந்த இரண்டாம் உலகப்போர் 75-ம் ஆண்டு வெற்றி தின விழாவில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.

அப்போது இந்தியாவில் நடக்க உள்ள இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து வரும் அக்டோபரில் இந்தியா-ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு வருடாந்திர மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்