![](admin/uploads/.6232d7586c5f45.13286230.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மும்பை: மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 10,854 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதேவேளையில் 11,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது.இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 779 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 316 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16,792 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 10,854 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,16,375 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1 லட்சத்து 46 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.