![](admin/uploads/.5f78644b0c5c74.16313179.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெரியநாயக்கன்பாளையம்: கோவை அருகே, அதிவேகமாக சென்ற கார் கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், தடாகம் - அணைகட்டி சாலையில், காளையனூர் என்ற இடத்தில், இன்று அதிகாலை 3:30 மணியளவில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் உள்ள மரம் மீது மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் சடலம், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.