Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை அருகே, அதிவேகமாக சென்ற கார் மரத்தில் மோதியதில் 4 பேர் பலி

ஆகஸ்டு 07, 2020 07:48

பெரியநாயக்கன்பாளையம்: கோவை அருகே, அதிவேகமாக சென்ற கார் கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம், தடாகம் - அணைகட்டி சாலையில், காளையனூர் என்ற இடத்தில், இன்று அதிகாலை 3:30 மணியளவில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் உள்ள மரம் மீது மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் சடலம், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்