Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரானா தொற்று உறுதி

ஆகஸ்டு 09, 2020 06:11

புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். நேற்று மத்திய அமைச்சர்கள் கைலாஷ் சவுத்ரி, மற்றும் அர்ஜூன் மேக்வால் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா , தர்மேந்திர பிரதான்ஆகியோர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகினர்.இந்நிலையில் நேற்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கொரோனா அறிகுறியுடன் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேக்வால் அவர் டுவிட்டரில் கூறியது, கொரோனா அறிகுறி இருப்பதால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன்; என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து விலகி தங்களை தாங்களே தனிமைபடுத்திக்கொள்ளுங்கள் என்றார்.

தலைப்புச்செய்திகள்