Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுயசார்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்

ஆகஸ்டு 09, 2020 08:14

புதுடெல்லி: சுயசார்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தயாராகியுள்ளது. இதன்படி 2020 முதல் 2024 ம் ஆண்டிற்குள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 101 பாதுகாப்பு தளவாடங்களுக்கு படிப்படியாக தடை விதிக்கப்படும்.

இந்த 101 பாதுகாப்பு தளவாடங்களில் உயர்ரக தொழில்நுட்ப துப்பாக்கிகளான ஆர்ட்டிலரி கன், அசால்ட் ரைபிள்ஸ்ல கார்வெட், சோனார் சிஸ்டம், லகுரக ஹெலிகாப்டர்கள், போக்குவரத்துக்கான விமானம் , ரேடார்கள் உள்ளிட்டவை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும்.

இந்திய பாதுகாப்பு துறையில் எதிர்பார்க்கப்பட்ட தேவைகள் குறித்து விவரிக்கவே, இந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு, உற்பத்தி தொழில்களை ஊக்குவிக்கவும், உள்நாட்டுமயமாதலின் இலக்கை அடைய சிறந்த முஐறயில் தயாராக உதவும். அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள உள்நாட்டு தொழில்கள் ஏறக்குறைய ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்களை பெறும்.

ராணுவத்திற்கான எஎப்பி போர் வாகனத்தை வெளிநாடுகளில் இருந்து வாங்குவது 2021ம் ஆண்டிற்குள் நிறுத்தப்படும். இந்த வகையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் உள்நாட்டு நிறுவனவங்களுக்கு கிடைக்கும்.கடற்படைசார்பில் வெளிநாடுகளில் இருந்து நீர்மூழ்கி கப்பல் இறக்குமதிக்கு 2021 டிச.,க்குள் தடை விதிக்கப்படும். அந்த வகையில் 42 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

விமானப்படை சார்பில், எல்சிஏ எம்கே 1 ஏ லகுரக போர் விமானங்களை இறக்குமதி செய்வது 2020 டிச., மாதத்தோடு தடை செய்யப்படும். 123 விமானங்களுக்கான ஆர்டர்கள் ரூ.86 ஆயிரம் கோடி உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும்.இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டுள்ள 101 வகையான பாதுகாப்பு தளவாடங்கள் இனிமேல் நம்முடைய தேவைக்கு ஏற்றார்போல், வடிவமைத்து மேம்படுத்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி னாருவாக்கலாம்.

உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை உதவும். தரைப்படை, விமானப்படை கடற்படை ஆகியவற்றிலிருந்து கடந்த 2015 முதல் 2020ம் ஆண்டு வரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு வெளிநாடுகளில் இருந்து இறுக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அடுத்த 7 ஆண்டுகளில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்