![](admin/uploads/.5f2512cdee43c0.51715599.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணம் பச்சையப்பா தெருவில் வசிப்பவர் முத்துகிருஷ்ணன் மகன் சதீஷ்கிருஷ்ணா (34). தனியார் நிறுவனத்தில் விற்பனை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கும்பகோணம் பா.ஜ.க. நகர தலைவர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சதீஷ்குமார் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
இதுகுறித்து சதீஷ்கிருஷ்ணா தெரிவித்ததாவது:
பெரியாரின் அம்மாவும், எனது கொள்ளுப்பாட்டியும் சகோதரிகள். எனது அம்மா வனிதா ஈரோட்டில் பிறந்தவர். எனது தந்தை முத்துகிருஷ்ணன் திருவாரூர் மாவட்டம் கொரடாடச்சேரியை சேர்ந்தவர். எனது தந்தை கொரடாச்சேரியில் ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தார். அப்போது பெரியார் எங்களது வீட்டுக்கு வந்துள்ளார். நான் பெரியாரின் உறவினர்.
பின்னர் நாங்கள் கும்பகோணம் வந்துவிட்டோம். நான் 2008-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றினேன். தற்போது பா.ஜ.க.வின் கொள்கைகள் எனக்கு பிடித்துள்ளதால் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.