Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய இ பாஸ் நடைமுறை

ஆகஸ்டு 16, 2020 01:48

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய இ பாஸ் நடைமுறை. விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கும் திட்டம் எளிதாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்ல இ பாஸ் நடைமுறையில் உள்ளது.

ஆனால் இ பாஸ் பெறுவது என்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. இ பாஸை முன்வைத்து முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதும் புகார். இதனால் இ பாஸ் பெறுவதில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் வகையில் தளர்வுகள் அமல்படுத்தப்படுகின்றன.

இ பாஸுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார், குடும்ப அட்டையுடன் செல்போன் எண்ணை பதிவு செய்தால் உடனே இ பாஸ் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

தலைப்புச்செய்திகள்