Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரையை 2வது தலைநகரமாக உருவாக்க வேண்டும்: அமைச்சர் கோரிக்கை

ஆகஸ்டு 16, 2020 02:00

சென்னை: மதுரையை தமிழகத்தின் 2ஆவது தலைநகரமாக உருவாக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், மக்கள் தொகைபெருக்கம் உட்பட, பல்வேறு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால நலன் கருதி, மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தின் இரண்டாம் தலைநகராகும் அனைத்து தகுதிகளும், வசதிகளும் மதுரையில் உள்ளன. 

இந்நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், ‛மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக உருவாக்க வேண்டும்,' என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக்கழகம் சார்பில் இது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தலைப்புச்செய்திகள்