Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மிராமர் : மறைந்த கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் உடலுக்கு பிரதமர் மோடி , ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மாலை 5.55 மணியளவில் பரீக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த மனோகர் பரீக்கர் நேற்று (17 ம் தேதி )இரவு காலமானார். நேர்மையான, எளிமையானவர் என பெயர் பெற்ற அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என பலரும் தங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பரீக்கர் மறைந்த இன்று தேசிய துக்கதினமாக அறிவித்து தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.