Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரி நியமனம்

ஆகஸ்டு 20, 2020 04:02

சென்னை: சென்னை பல்கலைக் கழகத்துக்குத் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக விண்ணப்பித்த 177 பேரில் 42 பேர் தேர்வு செய்யப்பட்டு 12 பேரிடம் மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் மூன்று பேரை துணைவேந்தராக நியமிக்க ஆளுநர் பரிந்துரைத்தார். இதனிடையே தமிழகத்தைச் சேர்ந்தவரையே துணை வேந்தராக நியமிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். 

இப்பதவிக்கு விண்ணப்பித்து 177 பேரில் உத்தரப்பிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மட்டும் 30 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் 12 பேருக்கு மட்டும் இறுதிக்கட்ட நேர்காணல் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரி நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழக துணைவேந்தராக சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்