![](admin/uploads/.5c8c87df7cdee5.87786815.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி இல்லத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் இல்லங்களில் பூஜிக்கப்பட்ட ஒரு அடி விநாயகரை, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஊர்வலத்தில் முன்னே கொண்டு போக, 5 அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கம்பீர விநாயகர் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
பகவத் விநாயகர் கோவில் ஆலயத்துக்கு முன்பாக திருஷ்டி பூசணிக்காயில் வரையப்பட்ட கொரோனாவை சூலம் கொண்டு வதம் செய்தனர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட கம்பீர விநாயகர் கும்பகோணம் பாலக்கரை டபீர் படித்துறையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
பாதுகாப்பு பணியில் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்பாளர் விஜய் பிரபு, நகர பொதுச்செயலாளர் பாலாஜி, ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவர் வைரவேல், மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி நிர்வாகிகள் நாகராஜ், அமரேஷ், செல்வம் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.