![](admin/uploads/.5fd2108a8d9129.10122775.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் முழு ஊரடங்கில் அடங்காத மதுப் பிரியர்களால் தன் நண்பனை பறி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரையில் ஸ்ரீபெரும்புதூர் மண்ணூர் பகுதியில் உள்ள டி.ஹெச்.எல். நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரியும் திருப்பத்தூரைச் சேர்ந்த கோபி (36) என்ற வாலிபர் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் நேற்று கொரோனா லாக்டவுன் நேரத்தில் சரக்கு அடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், ஏரியில் குளிக்கச் சென்று அங்கும், இங்கும் ஓடி விளையாடி கொண்டிருந்த பொழுது கோபி என்பவர் இடுப்பளவு ஆழத்தில் நீரில் மூழ்கி அதிகமான அளவு தண்ணீர் குடித்ததால் இறந்துவிட்டார்.
உடனே தகவலறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர் பிரேதத்தை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பிரேதத்தை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு சமயத்தில் அடங்காத குடிகாரர்களின் அட்டூழியத்தால் தங்கள் நண்பனை பறிகொடுத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.