Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் - சோனியாவுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்

ஆகஸ்டு 24, 2020 07:44

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருக்கும் சோனியாகாந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு, காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தனது கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் உங்கள் தலைமையின் மீதான எங்கள் முழுமையான மற்றும் உறுதியான நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். நீங்கள் சிரமங்களை எதிர்கொள்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆயினும், எங்கள் தலைவராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே எங்கள் தாழ்மையான வேண்டுகோள். காங்கிரஸ் கட்சி உங்கள் கைகளில் அல்லது ராகுல் ஜியின் கைகளில் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். வேறு எவராலும் அதை ஈடு செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.  

தலைப்புச்செய்திகள்