Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவல்நிலையம் முன்பே ஏட்டு தலையில் வெட்டிய ரவுடி

ஆகஸ்டு 27, 2020 05:52

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி காவல்நிலையம் முன்பு ஏட்டு திருப்பதி, 2 போலீசாருடன் நேற்று பிற்பகல் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த 2 பேரிடம் சோதனை செய்ததில் அவர்களிடம் கத்தி, அரிவாள், பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென பையில் இருந்த பட்டாக்கத்தியை எடுத்து திருப்பதியின் தலையில் வெட்டினார். 

இதில் காயமடைந்தார். பின்னர் டூவீலரில் இருந்து இறங்கிய அவர் தப்பி ஓடிவிட்டார். டூவீலரை ஓட்டி வந்தவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பிடிபட்டவர் மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த ரவுடி மணிகண்டன் என்பது தெரியவந்தது. தப்பிய முத்துலிங்கம் என்பவரை தேடி வருகின்றனர். காவல்நிலையம் முன்பே ஏட்டு தலையில் வெட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்