Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நித்யானந்தா படத்துடன் திருமண வாழ்த்து பேனர் வைத்த வாலிபர்கள்

ஆகஸ்டு 29, 2020 08:43

திண்டுக்கல்: ஆன்மீகவாதியாக அறிமுகமான சாமியார் நித்யானந்தா தனது சர்ச்சைக்குரிய பேச்சு, நடவடிக்கைகளால் பெரிதும் பேசப்பட்டாலும் அதற்கேற்ப பல்வேறு வழக்குகளிலும் சிக்கினார்.

தேடப்படும் குற்றவாளியான அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியாத நிலையே நீடிக்கிறது. ஆனால் கைலாசா என்ற ஒரு புதிய நாட்டை தான், உருவாக்கி இருப்பதாக அவ்வப்போது வீடியோக்கள் மூலம் அறிவித்து வருகிறார் நித்யானந்தா. 

கைலாசா நாட்டிற்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனை ஏற்று, மதுரையை சேர்ந்த பிரபல ஓட்டல் அதிபர் ஒருவர் கைலாசா நாட்டில் உணவகம் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்து, அதற்கு நித்யானந்தா ஒப்புதலும் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த சூழ்நிலையில் தான் திருமண நிகழ்வில் கைலாசா குறித்த விளம்பர பதாகைகளை வைத்துள்ளது இளைஞர்கள் பட்டாளம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேல மஞ்சம்பட்டியில் நேற்று நடைபெற்ற திருமண விழாவுக்காக வாலிபர்கள் பலரும் சேர்ந்து ஒரு விளம்பர பதாகை வைத்துள்ளனர்.

அந்த பதாகையில், “பல வருசமா கன்னித்தீவ தேடி அலையிற சிந்துபாத் எங்க...” “கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பன்னுன நம்ம நித்யானந்தா எங்க...” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி “நோ சூடு, நோ சொரனை” என்ற நித்யானந்தாவின் தாரக மந்திரமும் அந்த விளம்பர பதாகையில் இடம் பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி நித்யானந்தாவின் பெரிய புகைப்படத்தை அதில் பதிவிட்டுள்ள வாலிபர்கள் கடைசியாக “கைலாசம் செல்ல இருக்கும் நண்பர்கள்” என்று குறிப்பிட்டு அனைவரின் படங்களையும் வைத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்