![](admin/uploads/.6352470e78f9c1.27337841.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்துகளுக்கான பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து சென்னையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் பேருந்துகள் இயக்க உள்ள நிலையில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 50 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்துகளுக்கான பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தினசரி, மாதாந்திர பாஸ், விருப்பம் போல் பயணம் செய்யும் 1000 ரூபாய் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.