![](admin/uploads/.5cc18514dc75a2.54995434.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மும்பை: மும்பையில் அசுர வேகத்தில் வந்த கார் மார்க்கெட்டிற்குள் புகுந்தது. இதில் 4 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மும்பையில் பிரதான பகுதியில் கிராபோர்ட் என்ற மார்க்கெட் உள்ளது.
நேற்று இரவு 9.15 மணியளவில் அசுர வேகத்தில் வந்த கார் மார்க்கெட்டிற்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் 4 பேர் சம்பவ இடத்தி்லேயே உடல் நசுங்கி பலியாயினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகே ஜே.ஜே.,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். காரை ஓட்டி வந்நதவர் யார் என்பது குறி்த்து விசாரணை நடக்கிறது.