Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சபரிமலையில், கூட்ட நெரிசலில் சிக்கி ,உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி

செப்டம்பர் 01, 2020 02:09

திருநெல்வேலி: சபரிமலை ஐய்யப்பன் கோவில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா  நிதியுதவி வழங்கினார்.   திருநெல்வேலி மாநகரப்பகுதியான, தென் பத்து, சித்தன்குடியிருப்பை சேர்ந்த விவசாயி பாலு என்ற பால்ராஜ், கடந்த 2011- ஆம் ஆண்டு, சபரிமலைக்கு மகர ஜோதியைக் காணச்  சென்றிருந்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரிழந்தார். 

அவருடைய குடும்பத்திற்கான, நிவாரண உதவியாக, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை, அவருடைய குடும்ப உறுப்பினர்களான, 1) பேச்சியம்மாள் 2) மணிமேகலை 3) கண்ணம்மாள் 4) பிரபாகரன் 5) லட்சுமி ஆகிய 5 பேர்களுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், தனித்தனி காசோலைகளாக,  மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கினார். நிவாரண உதவியைப் பெற்றுக் கொண்ட அவர்கள், தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், நன்றி கூறினர்.

தலைப்புச்செய்திகள்