Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலி வள்ளியூரில், அஇஅதிமுக ஆலோசனை கூட்டம்

செப்டம்பர் 01, 2020 02:10

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், அஇஅதிமுகவில் இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்பதுரை எம்.எல்.ஏ.தலைமையில் நடைபெற்றது.

ராதாபுரம் தொகுதி வள்ளியூரில் அஇதிமுகவின் உட்பிரிவுகளான,  இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறைகளுக்கு, அதிக உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கட்சியின்  தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை தலைமையில் நடைபெற்றது.

அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் செழியன், வள்ளியூர் நகர  செயலாளர் பொன்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்பதுரை எம்.எல்.ஏ. தன்னுடைய தலைமை உரையில்,  கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி,  ராதாபுரம் தொகுதியிலுள்ள ஒவ்வொரு வாக்குசாவடியிலும் கழகத்தின் சார்பில் அரசியல் ஈடுபாடு  கொண்ட புதிய இளைஞர்களை ஒருங்கிணைத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைக்கபடவேண்டும். 

இளைஞர்களின் சக்தியை பயன்படுத்தி, அதிமுகவின் வெற்றிக்கு, அனைவரும் பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னிலை வகித்த, வள்ளியூர்  ஒன்றியச் செயலாளர் அழகானந்தம் பேசுகையில்,  இளைஞர் பாசறை நிர்வாகிகளுக்கான, நியமன வழிமுறைகள் குறித்து விளக்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சி மற்றும் எம்.ஜி.ஆர். மன்றங்களின்,மாவட்டம், ஒன்றியம் மற்றும் நகரம் ஆகியவற்றின் "நிர்வாகிகள்" திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் மாவட்ட  அவைத்தலைவர் கந்தன் ஆசாரி நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்