Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிசான் திட்ட முறைகேடு: கள்ளக்குறிச்சியில் 4 பேர் கைது

செப்டம்பர் 02, 2020 08:14

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள், கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் அளித்த புகாரின் பேரில் 4 ஒப்பந்த ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்ட முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களான கண்ணப்பன், ஏழுமலை, வீரன், மணிமேகலை ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விவசாயிகள் அல்லாத 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கிலிருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்