![](admin/uploads/.60d5615dec7a77.94384509.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாமரைபாடி அருகே உள்ள சாலை ஊரைச் சேர்ந்தவர் ரவி இவரது மகன் தமிழ்ச்செல்வன் வயது 15 இவர் அதே பகுதியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் சரத்குமார் வயது 14 இருவரும் டிவி பழுது பார்க்க தாமரைப்பாடி பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் சரி பார்த்த டிவியோடு இருவரும் தனித்தனி மிதிவண்டியில் சாலையில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லாத்துப்பட்டி பிரிவு அருகே வந்தபோது திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு வேன் மாணவர்கள் சென்ற சைக்கிள்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. வேன் மோதிய வேகத்தில் 500 மீட்டர் தூரம் மாணவர்கள் சைக்கிளோடு இழுத்துச் செல்லப்பட்டனர். மேலும் அவர்கள் பழுது நீக்க சென்ற டிவி சுக்கு சுக்கா நொறுங்கி சாலைகளில் சிதறிக் கிடந்தது.
இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே தலை சிதறி உயிரிழந்தனர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மாணவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சரக்கு வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.