Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமைச்சர் வளர்மதி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த பெண்கள்

செப்டம்பர் 03, 2020 05:33

மண்ணச்சநல்லூர்: சமயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சிக்கு மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சமயபுரம் நகர செயலாளர் சம்பத்குமார் வரவேற்று பேசினார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்த பெண்களை வரவேற்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி பேசும்போது ”பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் தொடர்ந்து தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த கட்சியில் இணைந்த அனைவருக்கும் நல்ல எதி்ர்காலம் உள்ளது,” என்றார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி பேசும்போது, மக்கள் நலனுக்கேற்ற பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சிந்தித்து செயல்படுத்தி வருகின்றனர். கொரோனோ காலத்தில் கூட ஓய்வெடுக்காமல் முதல்வரும், அமைச்சர்களும் செயல்பட்டு வருகிறோம். பெண்கள் உள்ளாட்சியில் அதிகளவு பிரதிநிதித்துவம் பெறும் வகையில் திட்டம் தீட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த ஆட்சியில் செயல்படுத்தி வரும் மகளிர் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு நீங்கள் இந்த கட்சியில் இணைந்துள்ளீர்கள். உங்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் கட்சி வழங்கும்,” என்றார்.

பெண்கள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியை ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரத்தினவேல், இந்திராகாந்தி, மாவட்ட கவுன்சிலர் ரமேஷ், ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால், சமயபுரம் பேரூராட்சி முன்னாள் சேர்மன் சின்னையன், திருப்பட்டூர் ஊராட்சி தலைவர் முருகன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் அர்ச்சுனன், மகளிரணி செல்வி வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்