![](admin/uploads/.5daff17093dff2.37045646.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வாணியம்பாடி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோரை கேலி செய்யும் விதமாக கார்டூன் வெளியிட்டதாக தினமலர் நாளிதழுக்கு எதிராக, அந்த கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமலர் நாளிதழ் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல்நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர காவல் நிலையம் முன்பாக தினமலர் நாளிதழிலை எரித்து தேமுதிக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.