Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்

செப்டம்பர் 05, 2020 02:51

தூத்துக்குடி: தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நேற்று முதல் டிக்கெட் முன்பதிவு துவங்கியது.

நான்காம் கட்ட ஊரடங்கின் தளர்வுகளாக பயணிகள் ரயில் சேவைகள் துவங்கும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதனையடுத்து தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் ரயில் சேவைகள் துவங்க உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நேற்று முதல் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு துவங்கியது. காலை முதலே பயணிகள் நீண்ட வரிசையில்  சமூக இடைவெளியுடன் நின்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

ஐந்து மாதங்களாக ரயில் சேவை இல்லாததால் தூத்துக்குடிக்கு கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்