Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உய்யகொண்டான் வாய்க்காலில் மூழ்கி மாணவன் பரிதாப பலி

செப்டம்பர் 06, 2020 11:10

திருச்சி: திருச்சியில் உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தென்னூர் மந்தை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் நவீன் (வயது 18). இவர் திருச்சி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை தனது நண்பருடன் குளிப்பதற்காக திருச்சி கலெக்டர் அலுவலகம் பின்னால் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் சென்றுள்ளார்.

மழைக்காலம் என்பதால் கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகம் ஆனது. இதனால் நவீன் தண்ணீரில் தத்தளித்து உள்ளார்  நண்பர்கள் போராடியும் மீட்க முடியவில்லை. அதனால் நவீன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து திருச்சி தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்