![](admin/uploads/.5ca1e74100bfc9.07064919.jpg)
Friday, 28th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
துறையூர்: துறையூர் அருகே சுற்றுலா தலமான புளியஞ்சோலையில் மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் செயல்படுவது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சுற்றுலா சுற்றுலா தலமான புளியஞ்சோலை பகுதியில் மழை வெள்ளத்தால் போன்ற பேரிடர் காலங்களில் செயல்படுவது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர் ஒத்திகை பயிற்சியை போலியாக நடத்தினர். பெரு வெள்ளங்களில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றுவது வெள்ளபெருக்கில் உயிர் காக்கும் கருவிகளை கையாள்வது போன்றவை செய்து காண்ப்பிக்கப்பட்டது.
உப்பிலியாபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் 7 ஊழியர்கள் பயிற்சியில் ஈடுப்பட்டனர் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.