Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து, இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலி

செப்டம்பர் 07, 2020 08:10

கோவை: கோவையில் பழமையான இரண்டு மாடிக்கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 
 
கோவை செட்டி வீதி கே.சி தோட்டம் பகுதியில் உள்ள பழமையான மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியகடைவீதி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டனர். 

அப்போது 5 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், 3 பெண்களை  காயங்களுடன் மீட்ட தீயணைப்புத் துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி 5 வயது ஆண் குழந்தையை சிறிய காயங்களுடன் பத்திரமாக மீட்டுள்ளனர். 

தலைப்புச்செய்திகள்