![](admin/uploads/.62d17a9c67c565.92065028.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஒரேநாளில் மொத்தம் 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 4 வாலிபர்கள் உட்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் ஒரேநாளில், இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து, மொத்தம் 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவைக் கடத்துவதற்கு, பயனபடுத்தப்பட்ட ஒரு கார் மற்றும் ஒரு பைக்கும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 4 வாலிபர்கள் உட்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீசார் திருநெல்வேலியை அடுத்துள்ள, முன்னீர்பள்ளம் பகுதியில், திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பலிடம் இருந்து, 22 கிலோ கஞ்சாவை, அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, வசவப்பப்புரம் ஆறுமுகக்கனி வயது.25), கே.டி.சி.நகர் தினேஷ் (வயது.22), கொக்கிரகுளம் பேராட்சி (வயது.21) மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது.21) ஆகிய, 4 வாலிபர்களும், கைது செய்யப்பட்டனர். கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட, ஒரு கார் மற்றும் ஒரு பைக் அவர்களிடமிருந்து, கைப்பற்றப்பட்டன.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தூத்துக்குடி மாவட்டம் சென்னல்பட்டியைச் சேர்ந்த மகேஷ் (வயது. 23), முத்துப்பாண்டி (வயது. 22), திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்புரத்தைச் சேர்ந்த சுந்தர் (வயது.21) ஆகிய மூன்று பேரும் தேடப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக, திருநெல்வேலி மாநகராட்சி பகுதியான பேட்டை மயில்புரம் பகுதியைச் சேர்ந்த, பிரபல கஞ்சா வியாபாரி அய்யப்பன் (வயது. 43) என்பவரிடமிருந்து, பேட்டை போலீசார், 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து, திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.