Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை தொழிலதிபர் 4 கோடி ரூபாய் மோசடி?!- ஹர்பஜன் சிங் காவல்துறையிடம் புகார்

செப்டம்பர் 10, 2020 09:46

சென்னை: கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சென்னை நகர போலீசாரிடம், சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தன்னிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். ஹர்பஜன் ரூ 4 கோடி கொடுத்த தொழிலதிபர், தனக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

ஹர்பஜன் சிங் ஒரு பொதுவான நண்பர் மூலம் தொழிலதிபரை சந்தித்தார். பின்னர் அவர் அந்த தொகையை 2015’ஆம் ஆண்டில் ஜி மகேஷ் என்ற தொழிலதிபரிடம் கடன் கொடுத்தார். பல ஆண்டுகளாக, ஹர்பஜன் சிங் பணத்தைப் பெற மகேஷை பலமுறை அணுகியதாகக் கூறப்படுகிறது. ஆனால் மகேஷ் பணம் செலுத்துவதை தாமதப்படுத்தினார்.

கடந்த மாதம், மகேஷ் ஹர்பஜன் சிங்கிற்கு 25 லட்சம் காசோலையை வழங்கியிருந்தார். ஆனால் இதுவும் வங்கிக்கணக்கில் போதுமான நிதி இல்லாததால் திரும்பியது. இதையடுத்து சமீபத்தில் சென்னைக்கு வந்த ஹர்பஜன், இந்த வழக்கில் முறையாக போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார்.

இந்த விவகாரத்தை விசாரிக்க மனு நீலாங்கரை உதவி போலீஸ் கமிஷனர் விஸ்வேஸ்வரய்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மகேஷை விசாரணைக்கு வர உதவி போலீஸ் கமிஷனர் சம்மன் அனுப்பினார். இதையடுத்து மகேஷ் கைதாவதிலிருந்து தப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளார்.

இதற்கிடையில், தலேம்பூரில் ஒரு அசையாச் சொத்தை அடமானமாக கொடுத்து பின்னர் ஹர்பஜனிடமிருந்து கடன் வாங்கியதாக மகேஷ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.  அனைத்து பாக்கிகளும் ஏற்கனவே ஹர்பஜன் சிங்கிற்கு செலுத்தப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை நடைபெறுகிறது.

தலைப்புச்செய்திகள்