Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்ட ஈரோடு காங்கிரஸ் 

செப்டம்பர் 10, 2020 09:46

ஈரோடு: தேர்தல் நெருங்கிட்டதை அடுத்து பூத் வேலைகளை தொடங்கிவிட்டது காங்கிரஸ். ஒவ்வொரு பூத்துக்கும் உறுப்பினர்களை சேர்ப்பதில் படு தீவிரமாக களம் இறங்கிவிட்டது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர். ஜி.ராஜன் தெற்கு மாவட்ட பகுதிக்கு உட்பட்ட வட்டாரத் தலைவர்களிடத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை வழங்கினார்.

முதல் கட்டமாக ஒவ்வொரு பூத்துக்கும் தலா 25 நபர்களை உறுப்பினராக்க வேண்டும், மேலும் தீவிர உறுப்பினர்கள் 5 பேர் வீதம் சேர்த்து கட்சி அலுவலகத்தில் 10 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் கேட்டுக் கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். எம். பழனிச்சாமி, ஊத்துக்குளி வடக்கு வட்டார தலைவர் சர்வேஸ்வரன், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜா சத்தியமூர்த்தி, செந்தில்குமார், பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் துரைராஜ், எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பிரபு, மொடக்குறிச்சி சட்டமன்ற ஒபிசி தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்