Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 11, 2020 10:28

தூத்துக்குடி: தமிழகத்தில் சிறைச்சாலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் உள்ள சிறைச்சாலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள முஸ்லிம்கள் மற்றும்
அனைத்து கைதிகளையும் செப்டர்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்ய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். இதில்,
ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10
ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து கைதிகளை விடுதலை விடுதலை செய்ய வேண்டும். மேலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர்கள் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தலைப்புச்செய்திகள்