Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறம் மக்கள் நல சங்கம் நிறுவனத் தலைவர் விடுதலை

செப்டம்பர் 11, 2020 12:46

திருப்பூர்: அறம் மக்கள் நல சங்கம் நிறுவனத் தலைவர் சு.ராஜா கயவர்களின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டார். அவர் விரைவில் விடுதலையாக வேண்டும் என மக்கள் நல சங்கம் நிர்வாகிகள் தாராபுரம் ரோடு பாத கருப்பராயன் கோயிலில் வேண்டுதல் வைத்தனர். வேண்டுதல் நிறைவேறியதால் ஆலயத்தில் 108 தேங்காய் உடைத்தும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அணையா விளக்கு கோவிலுக்கு வழங்கியும், அறம் மக்கள் நல சங்கம் நிர்வாகிகள் குடும்பத்துடன் வேண்டுதலை நிறைவேற்றினர்.

அறம் மக்கள் நல சங்க நிர்வாகிகள் வேண்டுதலை நிறைவேற்றி பேசிய போது நிறுவனத் தலைவர் சு.ராஜா வஞ்சகர்களின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டார். அவர் விரைவில் விடுதலையாக வேண்டுமென்று 108 தேங்காய் உடைப்பதாக வேண்டுதல் செய்து சிறப்பு பிரார்த்தனை செய்து இருந்தோம். எங்கள் பிரார்த்தனை நிறைவேறி நிறுவனத் தலைவர் சு.ராஜா சதிகாரர்களின் சதியை முறியடித்து சிறையிலிருந்து வெளி வந்து விட்டார்.
பிரார்த்தனையை நிறைவேற்ற திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள பாத கருப்பராயன் கோவிலில் 108 தேங்காய் உடைத்தும் மற்றும் 10, ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அணையா விளக்கு வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் நவீன், திருமூர்த்தி, சின்னச்சாமி, பிரபு, தர்மபுரி செந்தில், கோபால், ராணி, சித்தநாதன், ஆனந்த கண்ணன், வரதராஜ பெருமாள், ஜெயவேல், குப்புசாமி, குமார், சாகுல் பாய், ஆடிட்டர் சீனிவாசன், சிவா, தனம், எலக்ட்ரிகல் சண்முகம், வாசுதேவன், கனகராஜ் மற்றும் பல அறம் மக்கள் நல சங்க நிர்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றி குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்