Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிதாக போக்குவரத்து சிக்னல் உதவிக்கரம் அமைப்பினர் ஏற்பாடு

செப்டம்பர் 11, 2020 12:51

சென்னை: அம்பத்தூரில் இளைஞர்கள் முன்னெடுப்பில் சாலை விபத்துகளை குறைக்க புதிதாக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதை அம்பத்தூர் காவல் ஆய்வாளர் துவக்கி வைத்தார்.

அம்பத்தூர் சி.டி.எச். சாலை காவல் இணை ஆணையர் அலுவலகம் எதிரே போக்குவரத்து
நெரிசல் அதிகரித்ததோடு தொடர்ந்து சாலை விபத்துகள் நடைபெற்று வந்தன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி விபத்து நடைபெறாமல் இருக்க உடனடியாக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்று உதவிக்கரம் அமைப்பினர் சமூக சேவையுடன் இளைஞர்கள்
எல்லோரும் ஒன்றிணைந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் போக்குவரத்து சிக்னல் அமைத்தனர். இதனை உதவிகரம் தலைவர் ஆனந்த் தலைமையில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன் மற்றும் ஆவடி நகரமைப்பு ஆய்வாளர் தினகரன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

இந்தப் போக்குவரத்து சிக்னல் அமைத்ததன் மூலம் போகுவரத்து நெரிசல் மற்றும் விபத்து
குறைக்கப்படும் என உதவிக்கரம் அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்