Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமநாதபுரம்: பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் தமிழரசி, சுப.தங்கவேலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாவட்டத் தலைவர் தேவேந்திரன், தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், ராமநாதபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.