Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இமானுவேல் சேகரன் 63வது குருபூஜை விழா துாத்துக்குடி மாவட்ட அ.ம.மு.க. மரியாதை

செப்டம்பர் 11, 2020 01:14

தூத்துக்குடி மாவட்டம் ஒசனுத்தில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் பிரிவுச் செயலாளரும், தென்மண்டல அமைப்பாளருமான மாணிக்கராஜா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இமானுவேல் சேகரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் சுந்தர்ராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள், தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன், மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் புவனேஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் கணேஷ் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், குமார், இசக்கிமுத்து, கணபதி பாண்டியன், செல்வி, நேதாஜி, ஜெய்சங்கர் மற்றும் மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணி கிரேசி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எட்வின் பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ரமேஷ், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணசாமி, ரூஸ்வெல்ட், இன்னாசி, கொட்டமுத்து, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் சண்முக குமாரி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் வீரபத்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளர் கார்த்திக், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமி
மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்