![](admin/uploads/.5f89837a8f7ae8.51370886.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மன்னார்குடி:தனியார் பள்ளிகளில் முழுமையான கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்ககோரி மன்னார்குடியில் நாம்தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் கோரபிடியில் இருக்கும்போது வணிக பெருமக்கள், சுயஉதவிகுழுக்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கிய கடனை கந்துவட்டிகாரன் போல வசூல் செய்யும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை கண்டித்தும் , மத்திய, மாநில அரசுகள் அதனை உடனடியாக தடுக்ககோரியும், தனியார் பள்ளிகளில் முழுமையான கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்ககோரியும், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற ஊழலை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரியார் சிலை முன் நாம் தமிழர் கட்சியினர் மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பி
கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.