Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரானா நோயாளி பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி

செப்டம்பர் 13, 2020 11:50

திருப்பத்தூர்:உயிரிழந்த தாயின் உடலை பார்க்க பாச போராட்டம் நடத்திய கொரானா நோயாளி பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி நெகிழ்ச்சி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பாநேரி பகுதியை சார்ந்தவர் மின்னல் அம்மா உடல் நலிவுற்று நிலையில் காலமாகிவிட்டார். இவரது மகன் முருகேசன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது தாய் இறந்த விட்டு தகவலறிந்த முருகேசன் கடைசியாக தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரி மருத்துவமனையில் மன்றாடி உள்ளார். தகவலறிந்த வருவாய் துறையினர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முருகேசனுக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து அவரது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அழைத்து சென்றுள்ளனர்.

தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுத முருகேசன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் அப்பகுதியில் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினர் பாராட்டி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்