Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 92,071 பேர் பாதிப்பு:  பாதிக்கப்பட்டோர் 48.46 லட்சத்தை தாண்டியது, இதுவரை 79,722 பேர் பலி

செப்டம்பர் 14, 2020 06:56

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 48.46 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 79 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

*  புதிதாக 92,071 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,46,428     ஆக உயர்ந்தது.
*  புதிதாக 1,136 பேர் இறந்துள்ளனர்.
*  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 79,722 ஆக உயர்ந்தது.
*  தொற்றில் இருந்து ஒரே நாளில் 77,512 பேர் குணமடைந்துள்ளனர்;
*  இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 37,80,107 ஆக உயர்ந்துள்ளது.
*  இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,86,598 பேருக்கு            மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*  குணமடைந்தோர் விகிதம் 77.88% ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.65% ஆகவும்,     சிகிச்சை பெறுவோர் விகிதம் 20.47% ஆகவும் உள்ளது.
*  இந்தியாவில் ஒரே நாளில் 9,78,500 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை   செய்யப்பட்டுள்ளன.
*  இதுவரை 5.72 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்