![](admin/uploads/.5ce39872da3115.19479804.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தபால் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தபால் ஊழியர் ராமகிருஷ்ணன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராமகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது ராமகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் தனது தற்கொலைக்கு காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, தங்கவேலே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாககியுள்ள இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.