Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை :பாடிகுப்பம் 6 வது தெரு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் முகப்பேர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் வட மாநில இளைஞர்கள் தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் அவர்களது அறையில் இருந்து 5 செல்போன்கள் மற்றும் 10 ஆயிரம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து அவர்களது மேலாளர் சபீர் மூலமாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
இது தொடர்பாக ஜெ.ஜெ. நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் வனிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்பொழுது 20 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் அறையில் திருடிய பொருட்களை கைப்பயில் வைத்து எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. ஆனால், பழைய குற்றவாளிகளின் பட்டியலில் அந்த இளம்பெண் படம் இல்லாததால் அவரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் வீட்டில் திருடுபோன செல்போன் ஐ.எம்.இ. நம்பரை வைத்து அதனை பயன்படுத்தியவைரை அந்த செல்போன் சிக்னலை கொண்டு கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அண்ணாநகர் ரவுண்ட் பில்டிங் பகுதியை சேர்ந்த வாசுகி என்பதும், இவரது கணவர் சரத் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக குடித்துவிட்டு பிச்சுமணி என்பவரை கத்தியால் வெட்டிய வழக்கில் சிறைக்கு சென்றதும் தெரியவந்தது. கணவர் குடித்துவிட்டு ஊதாரியாக சுத்துவதாலும், போதிய வருமானம் இல்லாததால் பெண்கள் விடுதி மற்றும் திறந்து இருக்கும் வீடுகளில் புகுந்து வாசுகி திருடி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. வாசுகி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.