![](admin/uploads/.5d370f9b74c057.09802545.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவேற்காடு:அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜலால்(27), இவர் அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்திஜம் இரவு கடைக்குள் 4ஆடுகள் மற்றும் 15 கோழிகளை வைத்து விட்டு சென்றார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடைக்குள் இருந்த ஆடு மற்றும் கோழிகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார். திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருநின்றவூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த நபர்களை மடக்கி விசாரணை செய்தபோது காருக்குள் ஆடுகள் மற்றும் கோழிகள் இருப்பதால் சந்தேகமடைந்து விசாரித்த போது திருவேற்காட்டில் இருந்து திருடி கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களை திருவேற்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் சைமன் விசாரணை செய்தார். விசாரணையில் பிடிபட்டவர்கள் பொன்னேரி சேர்ந்த அஜய்(23), அஜித்(22), என்பதும் இவர்கள் காரில் வந்து திருவேற்காடு பகுதியில் ஆடுகள் மற்றும் கோழிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இவர்களிடமிருந்து நான்கு ஆடுகள், கோழிகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளியை தேடி வருகின்றனர். திருவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் அடிக்கடி திருடு போவதாக புகார்கள் வந்துள்ளன. போலீசார் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.