Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மன்னார்குடி:பேரறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர தி.மு.க. சார்பில் ருக்குமணிபாளையம் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் நாகை எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் , மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி அமைப்பாளர் சோழராஜன், நகர செயலாளர் வீரா கணேசன் உள்ளிட்ட தி.மு.க. நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து மன்னை மேற்கு ஒன்றியம் சார்பில் பாமணி கிராமத்தில் உள்ள டான்பெட் உரத் தொழிற்சாலையில் அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மீனாட்சி சூரியபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் சாரதி சரவணன் உள்ளிட்ட தி.மு.க. ஒன்றிய, இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.