Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணாவின் 112வது பிறந்த நாள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

செப்டம்பர் 15, 2020 09:59

திருநெல்வேலி:தி.மு.க.வின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான, அண்ணாவின், 112வது பிறந்த தினமான நேற்று திருநெல்வேலி மாவட்டம்  சேரன்மகாதேவியில், நகர அ.தி.மு.க. சார்பில், பேருந்து நிலையம் அருகில், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த, அண்ணாவின்  திருவுருவப்படத்திற்கு, மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து,  அனைவருக்கும்  இனிப்புகள் வழங்கப்பட்டன.

அ.தி.மு.க. நகரச் செயலாளர் வழக்கறிஞர் பழனிகுமார் தலைமை வகித்தார். இலக்கிய அணியின், மாவட்டச் செயலாளர் கூனியூர் மாடசாமி, கூட்டுறவு வங்கித் தலைவர் முருகன் நயினார்,  இளைஞர் அணியின்  நகரச் செயலாளர் மாசானம், மாவட்டப் பிரதிநிதி முத்துகுமார், கூட்டுறவு வங்கி இயக்குநர் மகாராஜன், முன்னாள் நகரச் செயலாளர் சவுந்தர் ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்