Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவாரூரில் மீட்புக்குழுவினர் தயார் :காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

செப்டம்பர் 16, 2020 07:31

திருவாரூர்:திருவாரூர் மாவட்ட காவல் மீட்புக்குழுவினரை ஒன்றுதிரட்டி ஆயுதப்படை மைதானத்தில் மீட்புபணி உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து மீட்புபணி காவல் அலுவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை அறிவுரை வழங்கினார்.  எதிர்வரும் *வடகிழக்கு பருவமழை காலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் உடன் மீட்புபணிகளை 24 மணிநேரம் மேற்கொள்ளும் வகையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்டத்தில் 8-காவல் மீட்புக்குழு தயார் செய்யப்பட்டுள்ளது.

இக்குழுவில் உள்ள காவல் அலுவலர்கள் அனைவரும் பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி முடித்தவர்கள் ஆவர். 8-மீட்புக்குழுவிற்கும் தனித்தனி காவல் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி காவல் மீட்புக்குழுவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வையில் இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்