Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: சேரன்மகாதேவியை அடுத்துள்ள, கங்கணான்குளம், திருவிருத்தான்புள்ளி, வேலியார்குளத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீமன் நாராயண சுவாமி திருத்தாங்கலில் ஆண்டுதோறும் ஆவணிப் பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான, "ஆவணிப்பெருந் திருவிழா" இம்மாதம் கொடியேற்றத்துடன், துவங்கியது. விழா நாட்களில், அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, தர்மம், திரு ஏடுவாசிப்பு, சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலாக்கள், அன்னதர்மம் என, பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. நிறைவு நாள், நள்ளிரவில், இந்திர வாகனத்தில், "அய்யா வைகுண்டர்" எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்குத் திருக்காட்சி தந்து, திருவருள் பாலித்தார். இதில், திருவிருத்தான்புள்ளி, வேலியார் குளம், கங்கணான்குளம், சேரன்மகாதேவி மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த, அன்புக்கொடி மக்கள், பக்தர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை திருத்தாங்கல் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிர்வாகிகள் செய்திருந்தனர்.