![](admin/uploads/.5ea93891c901a9.36628412.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டார்கள் மீது டெல்லி போலீஸ் போட்ட பொய் வழக்கை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு டெல்லி ஷாகீன் போராட்டக்காரர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கொலை வெறியாட்டத்தை கண்டித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டார்கள் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.பி.எம். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். இதில், சி.பி.எம். மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், சி.பி.ஐ. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சுரேஷ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உதுமான், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.