![](admin/uploads/.5d621195aab4b9.65408411.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: தமிழக முதல்வர் அறிவித்தபடி ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு ரூ.4,000ம், தூய்மை காவலர்களுக்கு ரூ.3,600 சம்பளத்திற்காக அரசாணை வெளியிட வேண்டும். கொரோனா பாதித்த தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பும், ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரை ஊதியம் வழங்காத ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வுப்பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு அரசு அறிவித்த அரசாணையின்படி பணிக்கொடை ரூ.50,000 மாத ஓய்வூதியம் ரூ.2,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. புறநகர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சி.ஐ.டி.யூ. புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன், உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.